×

165வது வார்டு பகுதி மக்களுக்கு சுகாதார நிலையம் அமைப்பேன்: நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் வாக்குறுதி

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 165வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத், ஆதம்பாக்கம், நிலமங்கை நகர், வாஞ்சிநாதன் தெரு, கேசரி நகர், வாணுவம்பேட்டை, என்.எஸ்.கே.சாலை, ராம் நகர் போன்ற பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, நங்கநல்லூர், ராம் நகர் போன்ற பகுதிகளில் மின் கம்பிகளை மாற்றிவிட்டு, பூமிக்கடியில் மின் கேபிள் பதித்து தருவேன், உயர் தொழில்நுட்ப டிரான்ஸ்பார்மர்களை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். பூங்காக்களை சீரமைப்பேன், சுகாதார பணிகள் மேற்கொள்வேன், நமது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பேன்,’’ என்றார்.வாக்கு சேகரிப்பின்போது, ஆலந்தூர் தெற்கு பகுதி காங்கிரஸ் தலைவர் ஆதம் ரமேஷ், திமுக சார்பில் நாகராஜசோழன், பேச்சாளர் மலர்மன்னன், லியோ.பிரபாகரன், ஆர்.பாபு, எல்ஐசி பாபு, ஏழுமலை, இ.எஸ்.பாபு, சேதுசெந்தில், வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், ஆனந்த்குமார், கிறிஸ்டோபர், பச்சையப்பன், இளையராஜா, சுப்புராஜ், ராஜேஷ், தினேஷ், பாலாஜி, சுரேஷ், நிர்மல், கணேசன், பிரபு, பெருமாள், ராஜ்குமார், ராஜேந்திரன், பால்ராஜ், கிருஷ்ணன், காங்கிரஸ் நிர்வாகிகள் பி.எஸ்.ராஜ், லயன் காமராஜ், நேரு ரோஜா, ஐ.செல்வம், எஸ்.வடிவேல், சுரேஷ் ஸ்ரீராம், எஸ்.ரமேஷ், ஜெய்கணேஷ், எஸ்.சூர்யா, மதிமுக சார்பில் கராத்தே பாபு, ஜி.திருநா உட்பட பலர் பங்கேற்றனர்.

The post 165வது வார்டு பகுதி மக்களுக்கு சுகாதார நிலையம் அமைப்பேன்: நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : 165th ,eswara prasad ,nange ,Alandur ,Chennai Corporation ,165th Ward ,Congress ,Nanjil ,V.R. Iswara Prasad ,Adambakkam ,Namangai ,Nagar ,Wanchinathan ,
× RELATED சிங்காரவேலர் 165வது பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து